கோத்தகிரி கடை வீதியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா திங்கட்கிழமை தொடங்கியது.இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை, மதியம் 12 மணிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச் சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 8-ந்தேதி காலை 7 மணிக்கும், 9-ந் தேதி மாலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 9-ந்தேதி முதல் 13-ந் தேதி வரை மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாக னத்தில் அம்மன் வீற்றிருந்து திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந் தேதி கோவிலில் மறுபூஜை நடத்தப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பண்ணாரி மாரியம்மன் கோவில் கமிட்டியினர் மற்றும் மகளிர் வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.