
நீலகிரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் வன விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன இந்நிலையில் கோத்தகிரி அருகே கப்பட்டி , மிளிதேன் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் கடந்த ஒரு வாரமாக உலா வந்துள்ளது – தற்போது காட்டு யானை தேயிலை தோட்டத்தில் தொடர்ந்து அதே பகுதியில் உள்ளதால் தேயிலை விவசாயிகள் தேயிலை பறிக்க முடியாமல் அவதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்காமல் பெயரளவில் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் தொடர்ந்து காட்டு யானை இதே பகுதியில் உலா வருவதால் இரவு நேரங்களில் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் வனத்துறையினர் உடனடியாக காட்டு யானையை வன பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
One Response
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.