
லகிரி மாவட்ட கூடலூர், மசினகுடி அருகே சிங்காரா வனப்பகுதியில் சிறியூர் மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. (திங்கட்கிழமை) காலை முதல் சிறப்பு பூஜை நடந்தது.. இரவு முழுவதும் படகர் இன மக்களின் ஆட்டம் நடைபெற்றது. மேலும் உயிலட்டி கிராமத்தில் சார்பில் நாடகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர் மேலும் முன்னதாக நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ கலந்துகொண்டு சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.மேலும் முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு கலந்து கொண்டு நடனமாடி நாடக நிகழ்ச்சிக்கு வாழ்த்துரை கூறினார்.இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பூ குண்டம் இறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யும் பணி தொடங்கப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு பக்தர்கள் பூ குண்டம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் திரளானூர் கலந்து கொண்டனர்.