
நீலகிரி மாவட்ட கோத்தகிரி கேர்பன் கிராமத்தில் அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்..
இவ்வாண்டு மாசிமக தேர்த்திருவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது..அன்று முதல் அரங்கநாதர் திருக்கல்யாணம் அன்னப்பட்சி வாகனம், சிம்ம வாகனம் என ரங்கநாதர் எழுந்தருளல் என ஒவ்வொரு நாளும் நகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது..கோவிலின் முன்புறம் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட திருத்தேரில் அரங்கநாதர், ஸ்ரீதே பூதேவியுடன் எழுந்தருள தேரரோட்டம் புறப்பட்டது.. கோவிலின் இருந்து தேர் கிராமத்தில் முக்கிய வீதியில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.இதில் கிராம மக்கள் பெண்கள் ஆண்கள் என திரளானூர் கலந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க படகர் இன மக்களின் ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.