கோத்திகிரியில் உலக கானுயிர் தினம்

கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலை பள்ளியில் உலக கானுயிர் தினத்தை முன்னிட்டு சி.பி.ஆர் சுற்று சூழல் கல்வி மையம் சார்பில் மாணவ,மாணவியர்க்கு வனவிலங்குகளை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…
இந் நிகழ்ச்சியில் கோத்தகிரி வனச்சரக வனச்சரகர் செல்வராஜ், கோத்தகிரி தோட்டக்கலைதுறை அலுவலர் கவின் பிரசாத்,பள்ளி தலை ஆசிரியை மோச்சாமேரி ஆகியோர் கானுயிர் நாள் பிரச்சார வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். சி.பி.ஆர் சுற்று சூழல் கல்வி மைய கள அலுவலர் குமரவேல் பேசும்போது காடுகளை வளர்க்க யானைகளின் பங்கு பற்றி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கதைவடிவில் உரையாற்றினார். நாக்குபெட்டா நலச்சங்க செயலாளர் போஜன் வனநீரின் பயன் பற்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நீலகிரி விவசாய சங்க உறுப்பினர் திம்பட்டி ராம்தாஸ் செய்திருந்தார். மாணவர்கள் ஆசியர் பெருமக்கள் கானுயிர் நாள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

Categories:Uncategorized