
நீலகிரி மாவட்ட கோத்தகிரி பகுதிகளில் அதிக அளவில் வன விலங்குகள் கரடிகள், காட்டெருமை, சிறுத்தைகள் என சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர்.
இந்நிலையில் கோத்தகிரி அருகே அரவேணு – பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் அதிகாலையில் சிறுத்தை உலா வந்தது. இந்தக் சிறுத்தை வீட்டையே சுற்றி சுற்றி உலா வந்துள்ளது. மேலும் நாயே வேட்டையாட முற்பட்டபோது நாய் தொடர்ந்து நாய் கத்திக் கொண்டிருந்ததால் சிறுத்தை புலி சைலன்ட் ஆக சென்றது தற்போது வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது இதனால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர் வனதுறையினர் சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.