முன்னாள் மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்திய வேலைகள் தற்போது தங்கு தடையின்றி நடைபெறுவதாக புகார்

நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி வாகனங்களுக்கு இயக்க – பாறைகள் உடைக்க நீதிமன்றம் தடை விதித்தும் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதரவுடன் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஜேசிபி வாகனங்கள் இயக்கப்படுகின்றன மேலும் பல்வேறு பகுதிகளிலும் பாறைகளை உடைத்தும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றனர் இந்நிலையில் கன்னேரிமுக்கு – கைகாட்டி பகுதியில் தனியார் சொகுசு விடுதி கட்ட ஜேசிபி வாகனங்கள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது ஜேசிபி வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தனர் . அப்போது உடனடியாக அந்த நபர் வருவாய்த்துறையினர் இந்த இடத்திலிருந்து உடனடியாக ஜேசிபி வாகனத்தை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளதாக அவசர அவசரமாக பாதிப்பணியில் சென்றனர் அதனைத் தொடர்ந்து மீண்டும் இரவு நேரத்தில் அப்பகுதியில் இயக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன இதுபோல கோத்தகிரி விநாயகர் கோவில் முன்பு , அரவேணு மேல் தட்டபள்ளம் , அளக்கரை சாலை , கொணவக்கரை என பல்வேறு பகுதிகளில் வருவாய்த்துறை ஆதரவுடன் ஜேசிபி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றனர் மேலும் மேல் தட்டபள்ளம் பகுதியில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்கள் அப்பகுதியில் விதியை மீறி கல் உடைப்பதும் சாலைகள் அமைப்பது என வேலை நடந்து வருவதால் அதனை தடுத்து நிறுத்தினார் . தற்போது அந்த பணிகள் மீண்டும் தங்கு தடையில்லாமல் நடைபெற்று வருகின்றன. தற்போது நீலகிரி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டங்களை அழித்து உல்லாச காட்டேஜ் கள் நடைபெற்று வருகின்றனர் மேலும் உள்ளூர் மக்கள் வீடு கட்ட அனுமதி அளிக்காமல் சொகுசு விடுதிகளுக்கு மட்டும் அனுமதி கிடைத்து வருகின்றனர் . இதனால் பொதுமக்கள் வேதனையில் உள்ளனர் தற்போது நீலகிரி மாவட்டத்தில் சொகுசு விடுதிகளை கட்ட பல்வேறு பகுதிகளில் விளம்பரங்கள் செய்து கட்டிடக்காடுகளாக உருவாகி வருகின்றனர் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பேராபத்து ஏற்படும் நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories:Uncategorized