பாதைகளை திறந்துவிட கலெக்டரிடம் மனு

நீலகிரி மாவட்ட ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி கலெக்டரிடம் அளித்துள்ள மனு: சோலுார் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா இம்மாதம், 7ம் தேதி முதல் நடக்கிறது. விழாவிற்கு, தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விழா நடைபெறும் நாட்களில் மலை பாதைகளை திறந்து விட வேண்டும். தவிர, பக்தர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது. இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Categories:Uncategorized