பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்

பந்தலூர் அருகே குந்தலாடி, ஓர்கடவு, பாக்கனா, புத்தூர்வயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவருகின்றன. இந்தநிலையில் குந்தலாடி பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைந்தன. பின்னர் விஜயன், தாமஸ்கோபி உள்ளிட்ட விவசாயிகளின் தோட்டங்களுக்குள் புகுந்து வாழைதென்னை, பாக்கு மரங்கள் மற்றும் பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. அதோடு தென்னை மரத்தை மின் கம்பிகள் மீது சாய்த்து போட்டன. இதனால் மின்தடை ஏற்பட்டது. காட்டுயானைகள் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்

Categories:Uncategorized