
கோத்தகிரி கடை வீதியில் பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா திங்கட்கிழமை தொடங்கியது.இதையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை, மதியம் 12 மணிக்கு அலங்கார பூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை 7 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் , பெண்கள் ,பெரியவர்கள் என குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை பண்ணாரி மாரியம்மன் கோவில் கமிட்டியினர் மற்றும் மகளிர் வழிபாட்டு குழுவினர் செய்து வந்தனர்