
கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.நிலையில் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகின்றனர். இந்நிலையில் கோத்திகிரி அருகே அரக்கம்பை சாலையில் தேயிலை தோட்டத்தில் காட்டு தீ பரவி உள்ளது இதனைத் தொடர்ந்து காட்டுதியானது தொடர்ந்து இரண்டு மணி நேரமாக எரிந்த நிலையில் இருந்ததால் அருகில் உள்ள கிராம மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறை சிறப்பு நிலை அலுவலர் மாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சரத்குமார், பாலமுருகன் ,மணி, செல்வராஜ் , பூவரசன் ஆகியோர் தீயை பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இதனால் பல ஏக்கர் தேயிலை தோட்டம் தீயில் கருகாமல் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததால் பொதுமக்கள், தேயிலை தொட்ட உரிமையாளர்கள் நிம்மதி அடைந்தனர்.