கோத்தகிரி தவிட்டுமேடு சேர்ந்த ஜோதிமணி மகன் நேசமணி என்பவர் தனது வீட்டிற்கு செல்வதற்காக நேற்று இரவு கோத்தகிரியிலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பஸ்சில் ஏரி உள்ளார் அப்போது கண்டக்டர் தவிட்டுமேடு பகுதிக்கு வந்தபோது பஸ்சை நிறுத்தி பயணிகளை இறங்க சொல்லி உள்ளார். ஆனால் அந்த பேருந்து நிறுத்தத்தில் யாரும் இறங்கவில்லை பஸ் புறப்பட்ட நிலையில் நேசமணி திடீரென ஓடும் பஸ்ஸில் இருந்து கீழே இறங்க உள்ளார். இதில் தடுமாறி கீழே விழுந்த அவரின் இடது கால் பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்கி, அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது