
தமிழகத்தின் விவசாயிகளின் தங்களது விளைபொருட்களை தாங்களை விற்பனை செய்ய கலைஞரின் கனவுகள் திட்டமான உழவர் சந்தை தமிழகத்தில் பல இடங்களில் திறக்கப்பட்டன இதனால் பல விவசாயிகள் பொதுமக்கள் அதிக அளவில் பலன் அடைந்தனர் இதுபோல கோத்தகிரி பஜார் பகுதியில் உழவர் சந்தை திறக்கப்பட்டது ஆனால் சில மாதங்களில் அது மூடப்பட்டன தற்போது பொதுமக்கள் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உழவர் சந்தை வேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் மனுக்கள் அனுப்பி வைத்தனர் அதில் அன்றைய வனத்துறை அமைச்சர் இன்றைய அரசு கொறடா ராமச்சந்திரன் உழவர் சந்தை அமைக்கப்படும் எனக் கூறி கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டன அதற்காக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உழவர் சந்தையை கைவிடப்பட்டன தொடர்ந்து விவசாயிகள் தங்களது விலை பொருட்களை மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு எடுத்தும் செல்லும் அவல நிலை இன்றும் தொடர்ந்து வருகின்றனர் தற்போது தமிழக அரசு கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உழவர் சந்தை திறக்க வேண்டும் என கூறி தற்போது விவசாயிகளை ஒன்று திரட்டி விரைவில் தொடர் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளனர் இதன் ஒரு பகுதியாக விவசாயிகள் பொதுமக்கள் என கையெழுத்து இயக்கம் நடத்தி அதை தமிழக முதல்வருக்கு அனுப்ப விவசாய சங்கங்கள் ஈடுபட்டுள்ளனர்.