கூட்டுறவு வங்கியில் லோன் வாங்க புரோக்கர்களை அணுகினால் உடனடி?

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் உள்ளன .தற்போது அவர்களுக்கு தேவையான விவசாயத்திற்கு பயிர் கடன் தேவைப்படுவதால் அவர்கள் கூட்டுறவு வங்கியை நாடி வருகின்றனர் அப்போது வங்கிக்கு தங்களது தோட்டத்திற்கு அனுபவ சான்று தேவைப்படுவதால் தனி நபர் கோத்திகிரி தாசில்தார் அலுவலகத்தில் மற்றும் இ சேவை மையங்களில் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் சான்றிதழ் கிடைக்க சில நாட்கள் ஆகும் ஆனாலும் விண்ணப்பங்களை நிராகரித்தும் மேலும் தோட்டத்தின் அளவை குறைத்து சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் இதற்காக கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள விஏஓ மூலமாக புரோக்கர்கள் வங்கிகளில் நேரடி தொடர்பு உள்ளனர் அவர்கள் வங்கியில் இருந்து அனுபவ சான்று பெற 2000 முதல் 5000 ரூபாய் தரப்படுகின்றன இதில் விஏஓ மற்றும் அலுவலர்கள் என மூன்று ஆயிரம் ரூபாய் புரோக்கர்கள் கொடுத்து வருகின்றனர் மீது உள்ள 2000 ரூபாய் புரோக்கர்கள் கமிஷனாக வாங்கிக் கொள்கின்றனர் மேலும் வங்கி செயலாளர்கள் விவசாயிகளிடம் கூடுதலாக தொகை பெறப்படுகிறது. ஆனால் புரோக்கர்களுக்கு எந்நேரத்திலும் சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுகிறது. மேலும் பணம் வழங்கவில்லை என்றால் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகின்றனர் மாவட்ட நிர்வாகம் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளை மற்றும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தற்போது உள்ள விஏஓ அலுவலர்களை பணியிடம் மாற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Categories:Uncategorized