கால்பந்து போட்டியில் ஓரசோலை அணி வெற்றி

நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் நடத்தும் 2024-25-ம் ஆண் டுக்கான கோவை டெக் ‘ஏ ‘ டிவிஷன் சாம்பியன் ஷிப் கால்பந்து போட்டி நேற்று தொடங்கி, வருகிற ஏப்ரல் மாதம் 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஓரசோலை பி.எம்.எஸ்.சி. கால்பந்து அணியும், எடப்பள்ளி காஸ்மோஸ் கால்பந்து அணியும் விளையாடின. இதில் சிறப்பாக விளையாடிய ஓரசோலை பி.எம்.எஸ்.சி. அணி 6-2 என்கிற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் அணி தமிழ் நாடு கால்பந்து சங்கம் நடத்தும் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக நேற்று காலை பி டிவிஷன் லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் நீலகிரி எப்.சி. மற்றும் ஹில்ஸ் கிங் அணிகள் விளையாடின. இதில் ஹில்ஸ் கிங் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 2-வது போட்டியில் சென்னை சூப்பர் ஸ்ட்ரைக்கர்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் ஊட்டி சிட்டி கால்பந்து அணியை வெற்றி பெற்றது.

Categories:Uncategorized